இவங்க 2 பேரும் அடுத்த மேட்சில டீமுக்குள்ள வந்துட்டா எல்லாம் சரி ஆகிடும் – மோர்கன் ஓபன் டாக்

Morgan-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 39 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை மட்டுமே குவித்தது.

RCBvsKKR

துவக்க வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பின்னர் எந்த இடத்திலுமே கொல்கத்தா அணியால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதிகபட்சமாக மோர்கன் 30 ரன்களையும், லோகீ பெர்குசன் 19 ரன்களை குவித்தனர். பெங்களூரு அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா அணி சுருண்டது என்றே கூறலாம்.

- Advertisement -

அதன் பின்னர் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா பெங்களூரு அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 85 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் படிக்கல் 25 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் குர்கீரத் சிங் 21 ரன்களும், விராட் கோலி 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணியின் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

rcb

இந்நிலையில் போட்டி முடிந்து கொல்கத்தா அணியின் தோல்வி குறித்தும், அந்த அணியின் இந்த நிலை குறித்தும் பேசிய மோர்கன் மீண்டும் இரு வீரர்கள் அணியில் இணையும்போது அனைத்தும் சரியாகிவிடும் என்று குறிப்பிட்டார். அதன்படி பந்துவீச்சு முறை சரியில்லை என்று அம்பயர்களால் புகார் செய்யப்பட்ட நிலையில் தற்போது தனது தவறை திருத்திக் கொண்டுள்ள சுனில் நரேன் மற்றும் காயம் காரணமாக விலகியிருந்த ரசலும் அணிக்கு திரும்பினால் அனைத்தும் சரியாகும் என்று கூறியுள்ளார்.

மேலும் இவர்கள் இருவரையும் குறித்து பேசிய மோர்கன் அவர்கள் இருவரும் மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராகிவிட்டார்கள். எங்கள் அணிக்கு வெற்றியை பெற்றுத்தரும் மேட்ச் வின்னர்களான அவர்கள் சரியான நேரத்தில் அணிக்கு திரும்புவார்கள் என்றும் அந்த இரண்டு ஆல்ரவுண்டர் அணிக்குள் வரும் போது எங்கள் அணி வலுப்பெறும் மோர்கன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement