இவங்க 2 பேரும் இப்படி விளையாடினா நாங்க எப்படி ஜெயிக்கிறது – ஆர்.சி.பி அணிக்கெதிரான தோல்வி குறித்து மோர்கன் வேதனை

Morgan-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் பத்தாவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி விளையாடத் தொடங்கிய பெங்களூரு அணிக்கு 2வது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரின் 2-வது பந்தில் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையிலும், பட்டிதார் 1 ரன் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

varun 1

இதன் காரணமாக பெங்களூர் அணி 2 ஓவர்கள் முடிவில் 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. பின்னர் படிகல்லுடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ஒருபக்கம் ரன்களை குவிக்க நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய படிக்கல் 25 ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன்களை சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 49 பந்துகளில் 3 சிக்சர்கள் 9 பவுண்டரி என 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

இறுதி நேரத்தில் டிவில்லியர்ஸ் 34 பந்துகளை சந்தித்து 3 சிக்சர்கள் 9 பவுண்டரி என 76 ரன்கள் அடித்து அசத்த இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை குவித்து அசத்தியது. சென்னை மைதானத்திற்கு 160 ரன்களை வெற்றிக்கு போதுமான நிலையில் இவர்கள் 200 ரன்களை அடித்ததால் போட்டியின் முடிவு அங்கேயே உறுதிசெய்யப்பட்டது.

maxwell

அந்த வகையில் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை மட்டுமே எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அன்றே அதிகபட்சமாக ரசல் 31 ரன்களையும், மோர்கன் 29 ரன்களும் குவித்தனர். பெங்களூர் அணி சார்பாக ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்களையும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில் : இந்த போட்டியில் ஆர்சிபி அணி நிறைய ரன்களை அடித்து விட்டது. இந்த மைதானம் இரண்டாவது பேட்டியின்போது மிகக் கடுமையாக இருந்தது. முதல் இன்னிங்சில் ஆர்சிபி அணி எங்களது சின்ன சின்ன தவறுகளை கூட சாதகமாக பயன்படுத்தி பெரிய அளவில் ரன்களை குவித்தது. நாங்கள் பவுலிங்கில் சில தவறுகளை செய்து விட்டோம்.

abd

அதிலும் குறிப்பாக டிவில்லியர்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இரண்டு வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒருவரை மட்டும் போகஸ் செய்து பந்து வீசுவது கடினம். மேக்ஸ்வெல் ஒரு ஸ்டார் பிளேயர் அதே போன்று டிவில்லியர்ஸ்ஸும் எங்கள் அணியின் பந்து வீச்சை அதிரடியாக எதிர்கொண்டு விளையாடி விட்டார். இவர்கள் இருவரில் ஒருவருக்கு எதிராக மட்டும் பிளான் செய்து தடுத்து நிறுத்துவது கடினம். மேலும் பெங்களூரு அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது என தோல்வி குறித்து மோர்கன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement