முதன்மை சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கை ஒரே ஓவரோடு நிறுத்தியது ஏன் ? – இயான் மோர்கன் கொடுத்த விளக்கம்

- Advertisement -

ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும், வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஆணியும் மோதின. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார். அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் குவித்தது.

SRH-vs-KKR

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரரான ராணா 80 ரன்களும், திரிப்பாதி 53 ரன்களையும் குவித்தனர். அதன் பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி துவக்கத்திலேயே அடுத்தடுத்து சஹா மற்றும் வார்னர் ஆகியோரது விக்கெட்டை இழந்தது பின்னர் மணிஷ் பாண்டே மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் குவித்தாலும் இறுதி நேரத்தில் அவர்களால் இலக்கை வெற்றிகரமாக துரத்த முடியவில்லை.

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் அவர்கள் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதன் காரணமாக கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில் : இன்றைய போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர் குறிப்பாக டாப் ஆர்டரில் விளையாடிய நித்திஷ் ராணா மற்றும் திரிப்பாதி ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி எங்கள் அணிக்கு ஒரு அருமையான தொடக்கத்தை கொடுத்தனர்.

rana 1

அவர்கள் அமைத்த அந்த சிறப்பான துவக்கம் தான் மிடில் ஓவர்களில் நாங்கள் இயல்பாக விளையாட உதவியது. பந்து வீச்சிலும் நாங்கள் சிறப்பாக துவங்கிய செயல்பட்டோம். பவர் பிளே முழுவதுமே எங்களுக்கு பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. ஹர்பஜன் சிங் முதல்வரை சிறப்பாக வீசினார் மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களுமே அருமையாக பந்து வீசினார்கள் என்று கூறினார். இந்நிலையில் இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக விளையாடிய முதன்மை சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் முதல் ஓவரை வீசிய தோடு பின்னர் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாமல் நிறுத்தப்பட்டார் .

harbhajan 1

இதுகுறித்து போட்டி முடிந்து பேசிய மோர்கன் கூறுகையில் : ஹர்பஜன் முதல் ஓவரை சிறப்பாகவே வீசினார். இருப்பினும் அதன்பிறகு அவர் பந்து வீசவில்லை. போட்டியின் சூழ்நிலை அவ்வாறு அமைந்தது. மேலும் போட்டியின் தன்மைக்கு ஏற்ப வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓவர் கொடுக்கப்பட்டதால் மீண்டும் ஹர்பஜன் சிங்கை அழைக்க முடியாமல் போனது. இருப்பினும் அவர் எந்தவித எண்ணமும் இன்றி அனைத்து வீரர்களும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டது மட்டுமின்றி தன்னலமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என மோர்கன் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement