ஒரே ஸ்பெல்லில் 9 ஓவர்கள்.. 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதின் ரகசியத்தை சொன்ன முகமது சிராஜ் – விவரம் இதோ

Siraj
- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜனவரி 3-ஆம் தேதி நேற்று கேப்டவுன் நகரில் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்த போட்டி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் ஜனவரி 3-ஆம் தேதி நேற்று துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் அந்த அணி பேட்டிங் செய்ய துவங்கியதும் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே பந்துவீச்சில் தனது அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சிராஜ் ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட்டை வீழ்த்தும் படி மிகப் பிரமாதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

குறிப்பாக நேற்றைய முதல் இன்னிங்ஸில் அவர் தொடர்ச்சியாக 9 ஓவர்களை வீசி 3 மெய்டன்கள் உட்பட 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாக தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்களில் சுருண்டது.

பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 153 ரன்களை குவித்தது. பின்னர் தென்னாப்பிரிக்க அணியானது 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தற்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்படி முதல் இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்ற என்ன காரணம் என்பது குறித்து பேசிய சிராஜ் கூறுகையில் :

- Advertisement -

இதுபோன்ற அதிக ஸ்விங் இருக்கும் ஆடுகளங்களில் பவுலர்கள் பேராசையுடன் பந்து வீசினால் ரன்கள் கசிந்து விடும். ஆனால் சரியான நேரத்தில் சரியான லைன் அன்ட் லென்த்தில் பந்து வீசினால் விக்கெட்டுகளை பெற முடியும். அந்த வகையில் முதல் டெஸ்ட் போட்டி ஏற்பட்ட குறைகளை சரி செய்ய வேண்டும் என்பதை நினைத்து நான் இரண்டாவது போட்டியில் சிறப்பாக பந்து வீசினேன்.

இதையும் படிங்க : கேப் டவுன் மைதானத்தில் தெறித்து ஓடிய பேட்ஸ்மேன்கள்.. 122 வருடம் கழித்து நிகழ்ந்த வித்தியாச சாதனை

அதோடு தொடர்ச்சியாக ஒரே இடத்தில் பந்து வீசுவது தான் என்னிடம் உள்ள பலம் என்று நினைக்கிறேன். அந்த வகையிலே இந்த போட்டியில் என்னால் அதை செய்ய முடிந்தது. மேலும் நான் என்னுடைய பலத்தில் கவனம் செலுத்தியதால் மட்டுமே 6 விக்கெட்டுகள் கிடைத்தது. தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement