2 முறையாக உலகின் நம்பர் 1 பவுலராக வந்த பின்னர் முகமது சிராஜ் வெளியிட்ட உருக்கமான பதிவு – விவரம் இதோ

Siraj
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் செப்டம்பர் 20-ஆம் தேதி புதன்கிழமை மீண்டும் ஐசிசி ஒருநாள் தரவரிசை பவுலர்களுக்கான பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். மொத்தம் எட்டு இடங்கள் முன்னேறியுள்ள அவர் இந்த பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளார். இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு தற்போது இந்த முதலிடம் கிடைத்திருக்கிறது.

இறுதியாக நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் கடைசி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல தனிநபராக முகமது சிராஜ் கை கொடுத்தார் என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

ஏனெனில் இலங்கை அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 7 ஓவர்களில் 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

அதோடு ஆசியக்கோப்பை தொடர் முழுவதுமே மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அவர் ஜாஷ் ஹேசல்வுட், ரஷீத் கான், மிட்சல் ஸ்டார்க் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதோடு இரண்டாவது முறையாக சிராஜ் தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான நம்பர் ஒன் பந்துவீச்சாளர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.

- Advertisement -

எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக முகமது சிராஜின் இந்த செயல்பாடு இந்திய அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்நிலையில் தான் மீண்டும் இரண்டாவது முறையாக ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்ததை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : முதல் முறையாக உலககோப்பையில் விளையாட இருப்பது குறித்து மனம்திறந்த சுப்மன் கில் – விவரம் இதோ

அந்த பதிவில் முதல் முறையாக தான் இந்திய அணிக்கு தேர்வாகும் போது தனது தாய் மற்றும் தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், தற்போது நம்பர் ஒன் பந்துவீச்சாளராக மாறிய புகைப்படத்தையும் பதிவிட்டு “மிஸ் யூ பாப்பா” என்று தனது தந்தையை நினைவு கூறி உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். அவரது இந்த இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement