இந்திய ஆடுகளங்களில் எப்படி விளையாடனும்னு இவர பாத்து கொத்துக்கோங்க – இளம்வீரர்களுக்கு கைப் அட்வைஸ்

Kaif
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் வேளையில் இவ்விரு அணிக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நாளை மார்ச் 1-ஆம் தேதி இந்தூரில் நடைபெறவுள்ளது.

Nathan Lyon Pujara IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் இந்த 3 ஆவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், முதல் இரண்டு போட்டிகளில் பெற்ற தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்று முனைப்புடன் ஆஸ்திரேலியா அணியும் களமிறங்க உள்ளதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் ரோஹித் சர்மா விளையாடி வரும் விதம் அற்புதமாக இருக்கிறது என்றும் இளம் வீரர்கள் அவரைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் தெரிவித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா இரண்டாவது போட்டியிலும் அணிக்கு தேவையான ரன்களை எடுத்து அசத்தியிருந்தார்.

Rohith

இப்படி முதல் 2 போட்டிகளில் அற்புதமாக விளையாடிய ரோகித் சர்மாவை பாராட்டி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் கூறுகையில் : ரோகித் தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் உள்ளார். அவரால் மிகச் சிறப்பான ஷாட்டுகளை விளையாட முடிகிறது. அதனால் அவருக்கு ரன்களும் கிடைக்கிறது. இந்தியா போன்ற சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ரோகித் அற்புதமாக பேட்டிங் செய்கிறார்.

- Advertisement -

லாங் ஆனில் பீல்டர் இருந்தாலும் அவருக்கு மேல் சிக்ஸ் அடிக்கும் திறமையும் அவரிடம் உள்ளது. வளர்ந்து வரும் ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை பார்த்து எவ்வாறு இந்திய ஆடுகளங்களில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டும் மேலும் ரோகித் விளையாடும் வீடியோக்களை பார்த்து பந்தினை எவ்வாறு அடித்து விளையாட வேண்டும் என்றும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS இதெல்லாம் 1998ல இருந்தே இந்தியாவில் நடக்குது, பிட்ச் பற்றி புதிய சர்ச்சையுடன் கிளம்பிய முன்னாள் ஆஸி வீரர்

அதோடு தற்போது ரோகித் சர்மா முழு நம்பிக்கையுடன் தற்போது மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். கடைசி இரண்டு போட்டிகளிலும் அவரது ஆட்டம் அற்புதமாக இருக்கும் என கைஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement