IND vs PAK : நேற்றைய போட்டி முடிந்ததும் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச்செல்லப்பட்ட நட்சத்திர வீரர் – என்ன ஆனது?

Rizwan
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கிய ஆசிய கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் குரூப் 4 சுற்றில் தகுதி பெற்ற இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தற்போது குரூப் 4 சுற்றில் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. அதன்படி நடைபெற்று முடிந்த முதலாவது குரூப் 4 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இலங்கை அணி வீழ்த்தியிருந்தது.

INDvsPAK

- Advertisement -

அதனை தொடர்ந்து நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது குரூப்-4 போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 181 ரன்கள் குவித்தது.

பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் 182 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக துவக்க வீரர் ரிஸ்வான் திகழ்ந்தார். 51 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 71 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

Rizwan 1

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது அவர் கீப்பிங் செய்யும்போது பந்தை எகிறி பிடிக்கையில் தவறுதலாக காலை கீழே அழுத்தி வைத்து விழுந்து வலியால் துடித்தார். இருப்பினும் சேசிங்கின் போது மீண்டும் வந்து பேட்டிங் செய்த அவர் இந்திய அணிக்கு எதிராக மேட்ச் வின்னிங் ரன்களாக 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டுள்ளது. நிலை தடுமாறி சரியான பேலன்ஸ் இல்லாமல் காலை கீழே வைத்து விழுந்துள்ள அவருக்கு பலமான காயம் ஏற்பட்டிருப்பதாகவும் காயத்தின் தன்மை மோசமாக இருந்தால் நிச்சயம் அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறும் சூழலும் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : IND vs PAK : இக்கட்டான வேளையில் விராட் கோலி செய்த அந்த விஷயம் சூப்பரா இருந்துச்சு – ரோஹித் சர்மா பாராட்டு

ஒருவேளை ரிஸ்வான் இந்த தொடரில் இருந்து வெளியேறினால் அது அவர்களுக்கு பெரிய இழப்பாகும். ஏனெனில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரிஸ்வான் தான் முதலிடத்தில் இருக்கிறார். இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டியில் விளையாடிய அவர் 2 அரைசதங்களுடன் 192 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement