ரிங்கு, கில்லுக்கு இடமில்லை.. துபே உட்பட தனது 2024 டி20 உ.கோ இந்திய அணியை வெளியிட்ட முகமது கைப்

Mohammad Kaif
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதில் 2007க்குப்பின் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கியுள்ளது. அந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏப்ரல் மாதத்தின் இறுதியில் அறிவிக்கப்படும் என்றும் சமீபத்தில் செய்தி வெளியானது.

அந்த அணியில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான தம்முடைய 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் முகமது கைஃப் தேர்வு செய்துள்ளார். அதில் குல்தீப்பை முதன்மை ஸ்பின்னராக தேர்ந்தெடுத்துள்ள அவர் அஸ்வினை கழற்றி விட்டு சகாலை பேக்-அப் வீரராக தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

கைப் இந்திய அணி:
ஆனால் ரிங்கு சிங், சுப்மன் கில்லை கழற்றி விட்டுள்ள அவர் ரியன் பராக்கை தேர்ந்தெடுத்து ஆச்சரியத்தை கொடுத்துள்ளார். இது பற்றி அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் ஓப்பனிங்கில் களமிறங்குவார். பின்னர் மூன்றாவது இடத்தில் விராட் கோலி, நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவ், ஐந்தாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா, 6வது இடத்தில் ரிசப் பண்ட் விக்கெட் கீப்பராக இடம் பெறுவார்கள்”

“பேட்டிங் ஆழத்தை அதிகரிப்பதற்காக நான் நிறைய ஆல் ரவுண்டர்களை வைத்திருப்பேன். அந்த வகையில் அக்சர் பட்டேல் 7வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா எட்டாவது இடத்திலும் இருப்பார்கள். பின்னர் குல்தீப் யாதவ் 9வது இடத்தில் விளையாடுவார். கடைசியாக ஜஸ்ப்ரித் பும்ரா, அரஷ்தீப் சிங் ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்களாக விளையாடுவார்கள்”

- Advertisement -

“இந்த அணியில் நான் மேலும் ஒரு ஸ்பின்னரை எடுத்துச் செல்வேன். குறிப்பாக சஹாலை நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் கடந்த முறை தேர்வான அஸ்வின் இம்முறை ஐபிஎல் தொடரில் பெரிய விக்கெட்டுகள் எடுக்கவில்லை. எனவே பந்து திரும்பும் சூழ்நிலைகளில் சஹால் சிறந்தவர் என்று நான் நம்புகிறேன். அதன் பின் நல்ல ஃபார்மில் ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் சிவம் துபேவை தேர்ந்தெடுப்பேன்”

இதையும் படிங்க: நம்பர் 3 ஆவது இடத்தில விளையாட இவர்தான் சரியான வீரர்.. லக்னோ அணிக்கெதிரான வெற்றிக்கு பின்னர் – ரிஷப் பண்ட் அளித்த பேட்டி

“6 ஓவர்களுக்கு பின் அவர் போட்டியை நன்றாக வழி நடத்துகிறார். அதே போல தற்போது அபாரமாக விளையாடும் ரியன் பராக்கை நான் தேர்வு செய்வேன். இந்த 14 வீரர்களுடன் முகமது சிராஜ் பெயரும் இருக்கும். தற்போது ஃபார்மில் இல்லையென்றாலும் நல்ல அனுபவத்தை கொண்டுள்ள அவர் சிறப்பான ரெக்கார்டுகளை வைத்துள்ளார்” என்று கூறினார்.

Advertisement