இந்த காரணத்தால் வாபஸ் வாங்கமுடியாது.. மறுபடியும் சொல்றேன் விராட் கோலி ஃசெல்பிஷ் தான்.. ஹபீஸ் அதிரடி

Mohammad Hafeez 2
- Advertisement -

நட்சத்திர வீரர் விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் 26000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து 80 சதங்கள் குவித்து இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி நாயகனாக செயல்பட்டு வருகிறார். அதனால் பலரும் அவரை கிரிக்கெட்டின் கிங் என்று பாராட்டுவது வழக்கமாகும். அதே சமயம் பல்வேறு நேரங்களில் அவர் சுயநலத்துடன் சொந்த சாதனைக்காக விளையாடுகிறார் என்ற சிலர் விமர்சிப்பதும் வாடிக்கையாகும்.

சொல்லப்போனால் 2024 ஐபிஎல் தொடரில் ஆரம்பக்கட்ட போட்டிகளில் விராட் கோலி சுயநலத்துடன் விளையாடுவதாக விமர்சனங்கள் காணப்பட்டன. அதற்கு முன்பாக 2023 உலகக் கோப்பையில் 765 ரன்கள் குவித்து சாதனை படைத்த விராட் கோலி இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். ஆனால் அத்தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் சுயநலத்துடன் விளையாடியதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஹபீஸ் விமர்சித்தார்.

- Advertisement -

ஹபீஸ் விமர்சனம்:
அந்தப் போட்டியில் 121 பந்துகளில் 101 ரன்கள் அடித்த விராட் கோலி 90 ரன்கள் கடந்ததும் கொஞ்சம் மெதுவாக விளையாடினார். அதனால் ரோகித் சர்மா மட்டுமே இந்தியாவுக்காக சுயநலமின்றி விளையாடியதாகவும் விராட் கோலி ஃசெல்பிஷ் என்றும் ஹபீஸ் வெளிப்படையாக விமர்சித்தார். இந்நிலையில் அந்த கருத்தை ஏன் சொன்னீர்கள்? திரும்பப் பெற விரும்புகிறீர்களா? என்று ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கேட்டார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த ஹஃபீஸ் மறுபடியும் விராட் கோலியை சுயநலவாதி என்று சொன்னதை நியாயப்படுத்தி ஆடம் கில்கிறிஸ்ட் யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “சூழ்நிலையை மொத்தமாக பார்த்தால் அப்போது நான் சொன்னது சரி என்றே நினைக்கிறேன். என்னை பொறுத்த வரை விளையாடுவது யார் என்பது முக்கியமல்ல. உங்களுடைய எண்ணம் அணியை வெற்றி பெற வைப்பதாக இருக்க வேண்டும்”

- Advertisement -

“ஆனால் ஒருவர் 90 ரன்கள் கடந்ததும் அதிரடியாக விளையாடத் தயங்கினால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக 95 ரன்கள் கடந்ததும் அடுத்த 5 பந்துகளில் 100 ரன்களை தொட்டால் அவருடைய எண்ணம் சதமடிப்பதாகும். ஒருவேளை அப்படி இல்லையென்றால் ஏன் அவர் 92 அல்லது 95 ரன்னில் ஷாட்டை அடிக்க பயப்பட வேண்டும்? என்னை பொறுத்த வரை அணியின் வெற்றிக்காக உங்களுடைய எண்ணம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா.. பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம் செய்து பேட்டி

“எனவே அங்கே பெரிய ஷாட்டுகளை அடிக்க முயற்சிக்காத விராட் கோலி சதத்தை தொடுவதற்கு அதிக பந்துகளை எடுத்துக் கொண்டதாக உணர்ந்தேன். அந்த போட்டியை இப்போது நீங்கள் பார்த்தாலும் நான் சொல்வதை புரிந்து கொள்ள முடியும். அணியின் வெற்றியை விட தனிப்பட்ட சாதனைகள் இரண்டாவதாக இருக்க வேண்டும். தோல்வியை சந்திக்கும் போட்டிகளில் அடிக்கப்படும் 50, 100 ரன்களை நான் பாராட்ட மாட்டேன். கிரிக்கெட்டில் 1 ரன் கூட வித்தியாசத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

Advertisement