சூரத்தில் பயிற்சியை துவங்கியும் இன்னும் அங்கு வராத முன்னணி வீரர் – சி.எஸ்.கே அணிக்கு விழுந்த அடுத்த அடி

moeen-ali-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனானது அடுத்த வாரம் மார்ச் 26-ஆம் தேதி துவங்கவுள்ளது. ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் ரசித்து பார்க்கப்படும் ஐபிஎல் தொடரானது இன்னும் ஒருசில நாட்களில் துவங்க இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதுமட்டுமின்றி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சீசனும் இந்தியாவில் நடைபெற இருப்பது கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் சீசனுக்கான பயிற்சியில் அனைத்து அணிகளும் தற்போது மும்முரம் காட்டி வருகின்றன.

CSK-2

- Advertisement -

மற்ற அணிகளை விட சிஎஸ்கே அணி முன்னதாக சூரத் நகருக்கு சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே இந்த ஆண்டும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை தக்க வைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது. ஆனாலும் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள ஒரு சில வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருவது சி.எஸ்.கே அணிக்கு பின்னடைவை தந்துள்ளது.

குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஆகியோர் காயமடைந்துள்ளதால் அவர்களின் நிலை குறித்த தெளிவான ஒரு தகவல் இல்லை. அதனை தொடர்ந்து தற்போது இன்னொரு வெளிநாட்டு வீரர் இன்னும் சிஎஸ்கே அணியின் பயிற்சி இணையவில்லை என்பது கூடுதல் வருத்தத்தை அளித்துள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக ஒரு ஆல்-ரவுண்டராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து வீரர் மொயின் அலி இதுவரை இந்தியா வந்து சிஎஸ்கே அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடாதது சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

moeen ali 2

ஏனெனில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய மொயின் அலி பேட்டிங்கில் 357 ரன்களுக்கு, பவுலிங்கில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அதுமட்டுமின்றி முக்கியமான நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடுவது, தேவையான நேரத்தில் விக்கெட் எடுப்பது என்று அசத்தி அந்த மொயின் அலி இந்த ஆண்டு சீசனுக்காக நேரடியாக சென்னை அணியில் தக்க வைக்கப்பட்டிருந்தார்.

- Advertisement -

அப்படி சிறப்பான ஒரு வீரராக பார்க்கப்படும் மொயின் அலி இதுவரை சிஎஸ்கே அணியின் பயிற்சியில் இணையாமல் உள்ளது அந்த அணிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையின்படி : மொயின் அலிக்கு விசா விண்ணப்பித்தும் இதுவரை மத்திய அரசு அனுமதி கொடுக்காததால் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் இந்தியா வருவார் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : காலம் கடந்த வீரர்களை வைத்துக்கொண்டு இந்தாண்டு சி.எஸ்.கே டீம் ஜெயிக்காது – முன்னாள் சி.எஸ்.கே வீரர் பேட்டி

ஆனாலும் அவர் இங்கு இந்தியா வரும் பட்சத்தில் கட்டாயம் மூன்று நாட்கள் குவாரண்டின் இருந்த பிறகே அவரால் பயிற்சியில் ஈடுபட முடியும் என்பதனால் அவர் முறையான பயிற்சி இல்லாமலேயே இந்த தொடரில் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement