- Advertisement -
உலக கிரிக்கெட்

பாகிஸ்தானை டேமேஜ் செய்யும் விராட் கோலியின் பலமே வேற.. 2024இல் அதை செய்யனும்.. எச்சரித்த மிஸ்பா

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதில் ஜூன் ஒன்பதாம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அந்த போட்டிக்கு வழக்கம் போல இரு நாடுகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆரம்பத்திலேயே இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது. ஆனால் அப்போது நங்கூரமாக விளையாடிய விராட் கோலி 82* (53) ரன்கள் அடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்தார். அது மட்டுமில்லாமல் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி 10 டி20 போட்டிகளில் 488 ரன்களை 81.33 என்ற அபாரமான சராசரியில் எடுத்துள்ளார்.

- Advertisement -

எச்சரித்த மிஸ்பா:
போதாகுறைக்கு தற்போது நடைபெறும் ஐபிஎல் 2024 தொடரில் அவர் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். எனவே உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் இம்முறையும் அவர் பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் உடல் வலிமையை விட மனவலிமையை அதிகமாக கொண்டுள்ள விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு சேதத்தை ஏற்படுத்துவது போல் செயல்படுவதாக முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் பாராட்டியுள்ளார்.

எனவே 2017 போல 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விராட் கோலியை முன்கூட்டியே அவுட்டாக்கத் தவறினால் இந்தியாவை தோற்கடிப்பது கடினம் என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “குறிப்பிட்ட எதிரணிக்கு எதிராக சில வீரர்கள் நன்றாக செயல்படும் போது அது அவர்கள் மனதில் இருக்கும். அந்தப் போட்டிகளில் உங்கள் தாக்கம் எப்போதும் வலுவாக இருக்கும் என்பதால் அது எதிரணியை பாதிக்கிறது”

- Advertisement -

“விராட் கோலிக்கு அந்த சாதகம் இருக்கிறது. ஆரம்பப் போட்டிகளில் மற்ற அணிகள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் முக்கிய இன்னிங்ஸ் விளையாடி டேமேஜை ஏற்படுத்தினார். பாகிஸ்தான் மீது விராட் கோலி மனதளவில் மேலாதிக்கத்தை வைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது கடினமான சூழ்நிலையில் கூட அவர் அதிக நம்பிக்கையுடன் இருப்பார். விராட் கோலி பெரிய போட்டிகளில் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் அதை உத்வேகமாக எடுத்துக் கொள்ளக்கூடிய வீரர்”

இதையும் படிங்க: இன்னும் 2 வருஷம் ஆசையிருக்கு.. நான் கேப்டனா வந்ததும் இந்திய அணியில் அதை மாத்திட்டேன்.. ரோஹித் பேட்டி

“டாப் க்ளாஸ் வீரரான அவர் எந்த அணிக்கு எதிராகவும் அசத்தக்கூடியவர். பாகிஸ்தான் உட்பட அனைத்து அணிகளும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் அவரை ஆரம்பத்திலேயே அவுட்டாக்குவதே வெற்றிக்கான ஒரே வழியாகும். ஸ்ட்ரைக் ரேட் பற்றி நீங்கள் எவ்வளவு பேசினாலும் விராட் கோலிக்கு தனது அணியை எப்படி வெற்றி பெற வைக்க முடியும் என்பது தெரியும். சூழ்நிலையும் எதிரணியும் எதுவாக இருந்தாலும் அது விராட் கோலிக்கு எதிராக பாதுகாப்பானதல்ல” என்று கூறினார்.

- Advertisement -