ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்சினை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 74 போட்டிகள் கொண்ட அத்தொடரில் இதுவரை 58 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இருப்பினும் எல்லைப் பிரச்சினை காரணமாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்றாக சேர்ந்து மைதானத்தில் பார்க்கக்கூடிய ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதனால் தற்காலிகமாக ஒரு வாரம் ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் ஒரு வாரம் கழித்து நிலைமைகளை ஆராய்ந்த பின் எஞ்சிய போட்டிகளை நடத்துவதற்கான தேதி, மைதானங்களை அறிவிப்போம் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது. தேசத்தின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை ஐபிஎல் அணிகள் மற்றும் ரசிகர்கள் வரவேற்றுள்ளார்கள்.
இங்கிலாந்தில் நடத்துங்க:
இந்நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை இங்கிலாந்தில் நடத்துங்கள் என்று அந்நாட்டின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்ததும் ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. எனவே ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை தங்கள் நாட்டில் விளையாடினால் அது இந்திய வீரர்கள் இங்கிலாந்து தொடருக்கு தயாராக உதவும் என்றும் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
அந்த வகையில் ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கும் திட்டம் பற்றி ட்விட்டரில் (எக்ஸ்) மைக்கேல் வாகன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இங்கிலாந்தில் ஐபிஎல் தொடரின் இந்திய போட்டிகளை முடியுமா? என்று ஆச்சரியப்படுங்கள். எங்களிடம் அனைத்து மைதானங்களும் உள்ளன. அங்கே விளையாடி விட்டு இந்திய வீரர்கள் அடுத்ததாக நடைபெறும் டெஸ்ட் தொடருக்காக அங்கேயே தங்கி விடலாம்”
பிசிசிஐ கவனிக்குமா:
“இது வெறும் என்னுடைய எண்ணமாகும்” என்று கூறினார். பொதுவாக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது இந்தியாவுக்கு சவாலான ஒன்றாகும். அப்படிப்பட்ட நிலையில் முன்கூட்டியே இங்கிலாந்தில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினால் அங்குள்ள கால சூழ்நிலைகளுக்கு இந்திய வீரர்களால் முன்னதாகவே உட்படுத்திக் கொள்ள முடியும்.
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள 4 வீரர்கள் – விவரம் இதோ
அதைப் பயன்படுத்தி 2007க்குப்பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இந்தியா வெல்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கலாம். இருப்பினும் இங்கிலாந்தில் எஞ்சிய போட்டிகளை நடத்தினால் பிசிசிஐக்கு செலவுகள் அதிகமாகும். அதனால் இங்கிலாந்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ யோசிக்கும் என்றால் மிகையாகாது.