நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோற்கவில்லை.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாஹன் இந்திய அணி குறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :
இந்திய அணியில் இன்னும் ரிஷப் பண்ட்டை ஏன் எடுக்கவில்லை என்று தெரியவில்லை. என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் அளித்த பெட்டியில் பண்ட் ஒரு சிறந்த வீரர் அவரை உலககோப்பை அணியில் சேர்க்காதது எனக்கு குழப்பம் அளிக்கிறது. மேலும் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தாலும் அந்த வெற்றியின் பங்களிக்காத விஜய் சங்கர் மற்றும் ஜாதவ் ஆகியோர் அணியில் இன்னும் நீடிக்கிறார்கள்.
Rishab Pant !!!!!!!!!!!!! How he doesn’t get in this team I will never know …… #CWC19
— Michael Vaughan (@MichaelVaughan) June 27, 2019
ஆனால் அணிக்கு வெற்றியை தர கூடிய பண்ட் வெளியே அமர்ந்திருக்கிறார் இதனால் இவர்கள் இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு அதற்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என்பது போல மைக்கல் வாஹன் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.