பிக்பாக்கெட் அடிச்ச மாதிரி.. மும்பை அந்த வெ.இ பிளேயரை வாங்கிட்டாங்க.. அஸ்வின் வித்யாச பாராட்டு

Ravichandran Ashwin 7
- Advertisement -

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் வலுக்கட்டாயமாக டிரேடிங் முறையில் வாங்கியது. குறிப்பாக தங்களுக்கு கோப்பையை வென்று கொடுத்த பாண்டியாவை குஜராத் அணி ஆரம்பத்திலேயே தக்க வைத்தது.

ஆனால் 5.25 மணிக்கு குஜராத் தக்க வைத்த அவரை இரவு 7.25 மணிக்கு மும்பை வலுக்கட்டாயமாக வாங்கியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் வங்கியில் திட்டமிட்டு கொள்ளையடிக்கும் பிரபல திரைப்படமான மணி ஹைஸ்ட் போல ஹர்திக் பாண்டியாவை திட்டமிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பிக்பாக்கெட் போட்டாங்க:
அதே போலவே வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ரோமாரியா செஃபார்டை லக்னோ அணியில் இருந்து வெறும் 50 லட்சம் அடிப்படை விலைக்கு பிக்பாக்கெட் அடித்தது போல் மும்பை கச்சிதமாக வாங்கியதாகவும் அஸ்வின் வித்தியாசமாக பாராட்டியுள்ளார். இது பற்றி தம்முடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு.

“மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ அணியிடமிருந்து தரமான டிரேடிங் செய்துள்ளது. சொல்லப்போனால் முதலில் ஹர்திக் பாண்டியாவை வாங்கியதே மணி ஹெய்ஸ்ட்டில் நாம் பார்த்தது போல நன்கு திட்டமிடப்பட்டது. ஆனால் ரோமாரியா செஃபார்ட் வாங்கியது காற்று வாங்குவதற்காக சென்ற ஒருவரிடம் சிறிய பிக் பாக்கெட் அடித்தது போல் அமைந்தது. கேரியரின் சரியான தருணத்தில் அவருக்கு மும்பை 50 லட்சம் கொடுப்பதாக நான் கருதுகிறேன்”

- Advertisement -

“செஃபார்ட் கடந்த 2 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் எதிர்பார்ப்பு நிகராக செயல்படவில்லை. இருப்பினும் கடந்து சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அவர் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் முக்கிய ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றினார். மறுபுறம் மும்பை அணியில் ஏற்கனவே நல்ல வலுவான வீரர்கள் இருக்கின்றனர்”

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் அடுத்த பிளேயர்.. கண்டிப்பா சான்ஸ் கிடைக்கும்.. காரணம் அது தான்.. அஸ்வின் நம்பிக்கை

“எனவே இம்பேக்ட் வீரர் விதிமுறையை பயன்படுத்தி எதிரணிகளை நொறுக்குவதற்கு செஃபார்ட் மிகவும் ஆபத்தான வீரராக இருப்பார்” என்று கூறினார். அதாவது அவரை இம்பேக்ட் வீரர் விதிமுறையை பயன்படுத்தி தேவையான நேரத்தில் பயன்படுத்துவதற்காக மும்பை திட்டமிட்டு வாங்கியுள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து நடைபெறும் ஏலத்தில் பாண்டியாவை வாங்கிய காரணத்தால் மற்ற அணிகளை காட்டிலும் குறைந்த கையிருப்பு தொகையுடன் மும்பை களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement