Worldcup : 2011-ல் யுவராஜ் செய்ததை இந்த தொடரில் இவரே செய்வார் – மெக்ராத்

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் விளையாடி விட்ட நிலையில் இந்தியா நாளை தனது முதல் ஆட்டத்தில்

Mcgrath
- Advertisement -

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் விளையாடி விட்ட நிலையில் இந்தியா நாளை தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாட உள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி கடந்த இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியில் வென்று வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சி செய்யும்.

india

- Advertisement -

அதே போன்று தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தன்னம்பிக்கையுடன் தொடரை ஆரம்பிக்க இந்திய அணி முயற்சி செய்யும். சவுதாம்ப்டனில் நாளை நடைபெற உள்ள இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும் டு பிளிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் யுவராஜ் சிங்கை போன்று ஜொலிக்கும் வீரர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மெக்ராத் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : 2011ஆம் ஆண்டு யுவராஜ் சிங் இந்திய அணிக்காக சிறப்பாக அடி உலக கோப்பையை பெற்றுத்தந்தார். அவர் அந்த தொடரில் மிகப் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அதை போன்று 2019ஆம் ஆண்டு இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா இந்த தொடரில் ஜொலிப்பார் என்று கூறினார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்தும் பாண்டியா இந்தியாவைவிட இங்கிலாந்தில் மிகப் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் மெக்ராத் கூறினார்.

Advertisement