- Advertisement -
உலக கிரிக்கெட்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மெக்கல்லம் கொல்கத்தா அணியுடன் இணைகிறார் – விவரம் இதோ

சர்வதேச கிரிகெட் போட்டியில் இருந்து 2016 ஆம் ஆண்டு மெக்கல்லம் ஏற்கனவே ஓய்வினை அறிவித்திருந்து இருந்தார். அதன்பிறகு நியூசிலாந்தின் அதிரடி ஆட்டக்காரரான பிரண்டன் மெக்கல்லம் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 தொடரில் மட்டும் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு கனடாவில் நடந்த குளோபல் டி20 லீக் போட்டியின் இடையே டி20 போட்டிகளில் தனது ஓய்வினை பிரண்டன் மெக்கலம் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது இந்நிலையில் அவர் கொல்கத்தா அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஷாருக்கான் அணியான கொல்கத்தா அணிக்காக அவர் முதல் சீசனில் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கரிபியன் பிரீமியர் லீக்கின் ஒரு அணிக்கு பயிற்சியாளராக பதவியேற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் உதவி பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார் மெக்கல்லம் எனபது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by