எனக்கும் ராகுலுக்கு இடையே இந்த விஷயத்தில் போட்டி இல்லை – அகர்வால் ஓபன் டாக்

Mayank-Agarwal
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 13 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும். கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

mivskxip

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். மேலும் இறுதி நேரத்தில் பாண்டியா மற்றும் பொல்லார்ட் ஆகியோர் அதிரடியாக விளையாட அந்த 191 ரன்கள் குவித்தது.

அதன் பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 44 ரன்களும். மயங்க் அகர்வால் 25 ரன்கள் குவித்தனர் இதன் காரணமாக மும்பை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

pattinson

இந்நிலையில் போட்டி முடிந்துபேசிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துவக்க வீரர் அகர்வால் கூறுகையில் : நாங்கள் ஆரஞ்சு தொப்பிக்காக போட்டி போடவில்லை. எங்களுடைய நோக்கம் அனைத்தும் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது மட்டும்தான். ரன்கள் குவிப்பது பற்றியும் ஆரஞ்சு தொப்பியை பற்றியும் எனக்கும் ராகுலுக்கும் இடையே எந்த ஒரு போட்டியும் இல்லை.

மேலும் அது மேக்ஸ்வெல் பூரான் யாராக இருந்தாலும் எங்களுக்கு போட்டியில்லை. அணிக்கு ரன்களை குவித்து வெற்றி பெற வேண்டும் இதை மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். சர்வதேச கிரிக்கெட்டில் ரன்கள் அடித்து உள்ளதால் எனக்கு சற்று நம்பிக்கை அதிகரித்துள்ளது.லாக்டவுன் நேரத்தில் டி20 போட்டிக்காக நிறைய பயிற்சி செய்தேன். இப்போது அதனை வெளிப்படுத்தி வருகிறேன் என்று அகர்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement