பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பினை அளித்தாலும், இந்த ஒரு விஷயத்துக்காக காத்திருக்கிறேன் – மனம்திறந்த மேக்ஸ்வெல்

- Advertisement -

ஐபிஎல் தொடரின் 6-வது லீக் போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின. டாசில் வெற்றி பெற்ற டேவிட் வார்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள படிக்கல் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளிக்க விராட்கோலி 33 ரன்களை குவித்தார். அதன்பின்னர் மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருக்க அதிரடி வீரரான மேக்ஸ்வெல் மட்டும் ஒரு பக்கம் தனியாக நின்று 41 பந்துகளில் 3 சிக்ஸர் 5 பவுண்டரி 59 ரன்கள் குவித்து போட்டியின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

maxwell

- Advertisement -

மேக்ஸ்வெல் என்ற தனி ஒருவரின் அதிரடி ஆட்டம் காரணமாக பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணி சார்பாக ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி துவக்கத்தில் சஹா விக்கெட்டை ஒரு ரன்னில் இழந்தாலும் வார்னர்(54) மற்றும் மணிஷ் பாண்டே(38)ஆகியோர் சிறப்பாக விளையாடினர். 16 ஓவர்கள் வரை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்த சன்ரைசர்ஸ் அணி எளிதாக வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மீதமிருந்த 4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.

குறிப்பாக சபாஷ் அகமது வீசிய 17வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை பெங்களூரு அணியின் பக்கம் கொண்டு வந்தார். பின்னர் இறுதி நேரத்தில் ரஷீத் கான் 9 பந்துகளில் 17 ரன்கள் அடித்து ரன் அவுட்டாக பரபரப்பான இந்த போட்டியில் 20வது ஓவரின் கடைசி பந்தில் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஷாபாஸ் அகமது 2 ஓவர்கள் வீசிய 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதேபோன்று ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.

shahbaz ahmed

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆட்டநாயகன் மேக்ஸ்வெல் கூறுகையில் : இந்த தொடர் சிறப்பாக துவங்கியிருக்கிறது. புது அணிக்காக நான் சிறப்பான ஒரு பங்களிப்பை அளித்து வருகிறேன். இதுபோன்ற ஒரு தொடரை சிறப்பாக துவங்குவது அற்புதமான தருணம் எங்கள் அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் பலமாகவே திகழ்கின்றனர். ஏபிடி உடன் விளையாடும் பொழுது முழு சுதந்திரம் கிடைக்கும். ஆஸ்திரேலியா அணிக்காக நான் எவ்வாறு சுதந்திரமாக விளையாடுகின்றேனோ அதேபோன்று இந்த இங்கும் விளையாடி வருகிறேன். அணி நிர்வாகமும், சப்போர்ட் ஸ்டாப்களும் என் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். என்னுடைய அனுபவத்தை போட்டிகளில் பயன்படுத்தி வருகிறேன்.

maxwell

இருப்பினும் இன்னும் சற்று சிறப்பாக விளையாடிய வேண்டிய எண்ணம் என்னுள் உள்ளது. முதல் பந்தில் இருந்தே அடிக்க வேண்டும் என்பது சரியானது கிடையாது. மைதானத்தின் தன்மையை புரிந்து தற்போது விளையாடி வருகிறேன். இது என்னுடைய நான்காவது ஐபிஎல் அணி என்பதால் சற்று பிரஷர் இருக்கிறது. இருப்பினும் நான் சிறப்பாக விளையாட இதுவே உதவுகிறது. பந்துவீச்சுக்காக நான் காத்திருக்கிறேன். வாஷிங்டன் சுந்தர் எங்கள் அணியில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். நான் பவுலிங் செய்யவில்லை என்றாலும் வெற்றிக்காக எனது பேட்டிங்கில் பங்களிப்பு என்பது மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றிபெற்ற அணியில் இருப்பது மகிழ்ச்சி என மேக்ஸ்வெல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement