ஆர்.சி.பி அணிக்கு ஏற்பட்ட பின்னைடைவு. ஐ.பி.எல் போட்டிகளை தவறவிடும் மேக்ஸ்வெல் – காரணம் என்ன?

Maxwell
- Advertisement -

ஐபிஎல் தொடரின் பதினைந்தாவது சீசனானது அடுத்த மாதம் மார்ச் இறுதியில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் பத்து அணிகளும் கலந்து கொண்டு தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு வாங்கின. அதில் பெங்களூரு அணியும் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான பல வீரர்களை ஏலத்தில் எடுத்தது.

- Advertisement -

ஏற்கனவே பெங்களூர் அணியில் மூன்று வீரர்கள் தக்க வைக்கப் பட்ட வேளையில் தற்போது முழு அணியையும் அவர்கள் ஏலத்தின் மூலம் தேர்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக நேரடியாக பெங்களூரு அணியால் தக்க வைக்கப்பட்ட ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் இந்த ஐபிஎல் தொடரின் முதல் பகுதியில் சில போட்டிகளை விளையாடமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ஆர்.சி.பி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகி உள்ளதால் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மேக்ஸ்வெல் தற்போது இந்த தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் வேறு கேப்டனுடன் ஆர்சிபி அணி களம் இறங்கும் என்று கூறப்படுகிறது.

maxwell

அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் பேட்டிங்கில் அதிரடி காட்டுவது மட்டுமின்றி, பீல்டிங், பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர் என அனைத்திலும் அசத்த கூடியவர். இந்நிலையில் அவர் ஐ.பி.எல் தொடரின் முதல் சில போட்டிகளை தவறவிட இருப்பது பெங்களூர் அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்தான காரணமும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட வினி ராமன் என்பவரை காதலித்து வந்த மேக்ஸ்வெல் அடுத்த மாதம் அவரை திருமணம் செய்ய இருக்கிறார்.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் முடிந்த பிறகு அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற உள்ள 20 தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த பாகிஸ்தான் தொடர் முடிந்து ஐபிஎல் தொடரிலும் அவர் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வரலாற்றிலேயே இது மோசமான செலக்சன்! ஐபிஎல் ஏலத்துக்கு பின் மும்பையை விளாசிய – பிராட் ஹாக் (எதற்கு தெரியுமா?)

ஏற்கனவே மேக்ஸ்வெல்லின் திருமண பத்திரிக்கை தமிழில் பதியப்பட்ட விடயம் இணையத்தில் வைரலாகி உள்ள வேளையில் தற்போது அவர் திருமணத்திற்காக ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை தவறவிட இருக்கும் செய்தியும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement