அக்தர் என்னை கொன்னுடுவேன்னு சொன்னார். அதற்கு நான் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா ? – ஹைடன் அதிரடி

Akhtar-2
- Advertisement -

சோயப் அக்தர் தான் ஆடிய காலகட்டத்தில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஏதாவது ஒரு வகையில் எப்போதும் யாரையாவது திட்டிக்கொண்டே இருப்பார். அவர்களுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டு எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்.இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுள்கர், சௌரவ் கங்குலி, வீரேந்தர் சேவாக் போன்ற வீரர்களுடன் பலமுறை வார்த்தை போரில் ஈடுபட்டிருக்கிறார்.

Akhtar 4

- Advertisement -

இந்திய வீரர்கள் மட்டுமல்லாது எந்த நாட்டு வீரர்கள் இருந்தாலும் அவர்களை வம்பு இழுத்துக் கொண்டே இருப்பார் சோயிப் அக்தர். இந்நிலையில் அவரையே ஒருவர் வம்பு இழுத்துள்ளார். ஆம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஹைடன் 2002 ஆம் ஆண்டு பந்து வீச வந்த அக்தரை கண்டபடி பேசி அவரை கோபம் ஆகியுள்ளார். இந்த செய்தியை தற்போது பேசியுள்ளார். அவர் கூறுகையில் ….

நாங்கள் மிகுந்த வெப்பத்தின் கீழ் சார்ஜா மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது சோயிப் அக்தர் என்னிடம் அருகே வந்து உன்னை நான் இன்று கொல்லப் போகிறேன் என்று கத்தினார்.

Hayden 1

நான் அதற்கு அந்த சவாலை ஏற்க தயாராக வாருங்கள் என்று சொல்லி அனுப்பினேன். மேலும் நீ ஒரு இரண்டாம்தர படத்தின் “பி கிரேட் நடிகன்” என்று வசைபாடினேன்.இதனை கேட்டதும் சோயிப் அக்தர் கோபத்தில் பொங்கி விட்டார் அதன் பின்னர் பந்துவீச வரும் போதெல்லாம் என்னை திட்டிக் கொண்டே இருந்தார்.

Hayden

இதன் காரணமாக அவர் பந்துவீச வரும் போதெல்லாம் என்னுடைய இடத்திலிருந்து நகர்ந்து விடுவேன், எங்களுக்குள் அடிக்கடி வார்த்தைப் போர் இருந்துகொண்டே இருக்கும் அதனை கள நடுவர்கள் வந்து சரிசெய்வார்கள் என்று கூறியுள்ளார் மேத்யூ ஹைடன்.

Advertisement