என் தவறுக்கு மன்னிப்பு கேட்க விரும்பவில்லை. 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய – தெ.ஆ வீரர்

Markram-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது கிரிக்கெட் போட்டி நாளை ராஞ்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அது தொடரை பாதிக்காது. ஏற்கனவே இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி உள்ளதால் ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

IND vs RSA

- Advertisement -

இருப்பினும் இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கில் உள்ளதால் இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற முயற்சிக்கும் எனலாம். இந்நிலையில் நாளை துவங்க உள்ள இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரான மார்க்ராம் அணியில் இடம் பிடிக்க மாட்டார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏனெனில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே புனேவில் நடந்த இரண்டாவது போட்டியின்போது மார்க்ராம் மணிக்கட்டுப் பகுதியில் காயம் அடைந்தார்.

அந்த காயத்தின் தன்மை தற்போது தீவிரமாக உள்ளதால் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அந்த ஸ்கேனில் அவரது மணிக்கட்டில் எலும்பு முறிவு சிறிய அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மூன்றாவது போட்டியில் இருந்து விலகி நாடு திரும்புகிறார் இந்நிலையில் அதற்கு முன்னதாக மார்க்ராம் அளித்த பேட்டியில் கூறியதாவது : அனைவரது உணர்ச்சியும் ஒரு சூழலில் அதிகமாகவும் ஒரு சூழலில் நிதானமாகவும் இருக்கும்.

Markram 1

இம்முறை இந்திய தொடர் சற்று எங்களுக்கு மன வருத்தத்தை தருகிறது. எங்களால் நாங்கள் நினைத்த அளவு விளையாட முடியவில்லை. என்னுடைய ஆட்டத்திற்கு நானே பொறுப்பு என்கிறேன் நான் அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை ஏனெனில் என்னுடைய பொறுப்பை நான் செய்ய தவறி விட்டேன். இருப்பினும் தென்ஆப்பிரிக்க அணி இதிலிருந்து மீண்டு வெற்றிகரமாக திரும்பும் நான் மீண்டும் அணியுடன் இணைய காத்திருக்கிறேன் என்று மார்க்ராம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement