இந்திய ரசிகர்கள் பணம் கட்டுறாங்கன்னு.. எல்லாமே இந்தியாவுக்கு சாதகமா? ஐசிசி’யை விளாசிய மார்க் பட்சர்

Mark Butcher
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றில் 3 வெற்றிகளை பெற்றது. அதனால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஜூன் 20ஆம் தேதி பார்படாஸ் நகரில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

முன்னதாக இந்த தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக 20 அணிகள் விளையாடுவதற்கு ஐசிசி அனுமதித்தது. ஆனால் அதன் காரணமாக சூப்பர் 8 சுற்றில் தரவரிசையில் டாப் 8 இடங்களில் உள்ள அணிகளுக்கு ஐசிசி முன்னுரிமை கொடுத்தது. அதாவது லீக் சுற்றின் புள்ளிப்பட்டியலில் எந்த இடத்தை பிடிக்கிறார்கள் என்பதை தாண்டி சூப்பர் 8 சுற்றில் தரவரிசையில் டாப் இடங்களில் உள்ள அணிகள் மோதும் வகையில் ஐசிசி அட்டவணையை வடிவமைத்தது.

- Advertisement -

இந்தியாவுக்கு சாதகம்:
அதனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சூப்பர் 8 சுற்றில் மோதுவது லீக் சுற்றும் முழுமையாக முடிவடைவதற்கு முன்பாகவே அனைவருக்கும் தெரிந்தது. அதை விட சூப்பர் 8 சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்றால் இந்தியா புள்ளிப்பட்டியலில் எந்த இடத்தை பிடிக்கிறது என்பதை தாண்டி 2வது செமி ஃபைனலில் விளையாடும் என்று ஐசிசி பிரேத்யேக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏனெனில் கயானா நகரில் நடைபெறும் 2வது செமி ஃபைனல் தான் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கும். ஒருவேளை ட்ரினிடாட் நகரில் நடைபெறும் முதல் செமி ஃபைனலில் இந்தியா விளையாடினால் அதிகாலை 6 மணிக்கு ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். அதற்காக இந்த முடிவை ஐசிசி எடுத்துள்ளது. ஆனால் இதற்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் பட்சர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி விஸ்டன் இணையத்தில் அவர் பேசியது பின்ருமாறு. “இங்கே ஒரு அணிக்கு மட்டும் சூப்பர் 8 சுற்றில் எந்த குரூப்பில் விளையாடுவோம், செமி ஃபைனல் எங்கே நடைபெறும் என்பது தெளிவாக தெரிகிறது. ஒரு தொடரை இப்படி நீங்கள் எப்படி நடத்த முடியும்? ஏனெனில் ஒரு அணிக்கு மட்டும் செமி ஃபைனல் எங்கே எப்போது எந்த தேதியில் விளையாடுவோம் என்பது தெளிவாக தெரிகிறது”

இதையும் படிங்க: வெறும் 4 ரன்ஸ்.. தெறிக்கவிட்ட தெ.ஆ.. கடைசி பந்தில் இந்தியா திரில்லர் வெற்றி.. ஹர்மன்ப்ரீத் மிரட்டல் சாதனை

“ஆனால் எதிரணிக்கு அதைப் பற்றிய ஐடியாவே தெரியாது. இது ஆச்சரியமளிக்கிறது. இதற்கான காரணம் என்னவெனில் இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் பணம் கட்டுவதால் போட்டியை காண்பிப்பதற்கான சத்தியம் கொடுக்கப்படுகிறது. அதே காரணத்தால் அரையிறுதிக்குச் சென்றால் எங்கே விளையாடுவார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. இது பற்றி வர்ணனையாளர்கள் பேச மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஐசிசிக்கு வேலை செய்கின்றனர். ஒருவேளை இதை விமர்சித்தால் உங்களுக்கு தடை விதிக்கப்படும்” என்று கூறினார்.

Advertisement