CSK vs SRH : சி.எஸ்.கே வீரரின் தலையை பதம் பார்க்க இருந்த மனிஷ் பாண்டேவின் ஷாட்

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமை

Chahar
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 49 பந்துகளில் 83 ரன்களை குவித்தார், வார்னர் 57 ரன்களை குவித்தார். இதனால் சென்னை அணிக்கு 176 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணியின் வீரரான மனிஷ் பாண்டே அபாரமாக ஆடினார். இன்று ஆக்ரோஷமாக ஆடிய மனிஷ் பாண்டே சென்னை வீரர் தீபக் சாகர் வீசிய பந்தை நேராக பலமாக ஓங்கி அடித்தார். அந்த பந்து நேராக சாஹரின் தலையை நோக்கி சென்றது. பந்து தன்னை நோக்கி வருவதை கணித்து சுதாரித்த சாகர் குனிந்தார். இதனால் அவர் அடிபடாமல் தப்பித்தார்.

பிறகு 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிவரும் சென்னை அணி 8 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்களை அடித்துள்ளது. இன்னும் சென்னை அணியின் வெற்றிக்கு 108 ரன்கள் தேவை.

Advertisement