மும்பை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் முதல் 6 போட்டிகளில் ஆடமாட்டார் – அதிகாரபூர்வ அறிவிப்பு

MUMBAI
- Advertisement -

இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் நாளை மாலை முதல் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Ipl cup

- Advertisement -

இந்நிலையில் மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா மும்பை அணியின் முதல் 6 போட்டிகளில் விளையாடமாட்டார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், மலிங்கா ஏன் 6 போட்டிகளில் ஆடவில்லை என்ற தகவலையும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது இலங்கை அணியின் கேப்டனாக இருக்கும் மலிங்கா வரும் உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியை வழிநடத்த உள்ளார். எனவே, அந்நாட்டு நிர்வாகம் தற்போது அந்த அணி வீரர்களை உலகக்கோப்பை தொடருக்கு தயார் படுத்தும் விதமாக உள்ளூர் போட்டிகளில் ஆட கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, அந்த போட்டிகளை முடித்த பின்னரே மலிங்கா மும்பை அணியில் இணைவார் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

malinga

சென்ற வருடம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக பணியாற்றிய மலிங்கா இந்த ஆண்டு மீண்டும் அணியில் இணைந்து விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் மும்பை அணியில் பல நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement