MI vs RCB : ஒவ்வொரு போட்டி முடிந்ததும் நான் இலங்கை சென்றே ஆக வேண்டும் – காரணம் இதுதான் மலிங்கா

ஐ.பி.எல் தொடரின் 31 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை அணியும், விராட் கோலி தலைமை

Malinga-1
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 31 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதின.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 51 பந்துகளில் 75 ரன்களும், மொயின் அலி 32 பந்துகளில் 50 ரன்களும் குவித்தனர்.

பிறகு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டிகாக் 40 ரன்களும், கடைசி நேரத்தில் பாண்டியா அதிரடியாக ஆடி 16 பந்தில் 37 ரன்களை அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். மலிங்கா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Pandya 1

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் மலிங்கா கூறுகையில் : கடந்த இரண்டு வாரங்களாக நான் சற்று சிரமப்பட்டு கிரிக்கெட் விளையாடிவருகிறேன். ஏனெனில் இந்தியாவில் ஒவ்வொரு ஐ.பி.எல் போட்டி விளையாடி முடிந்ததும் இலக்கை சென்று உள்ளூர் போட்டிகளில் ஆடவேண்டும். பிறகு அங்கிருந்து மீண்டும் மும்பை அணியில் இணைய வேண்டும் இப்படி தொடர்ச்சியான பயணங்களால் நான் மிகவும் களைப்பாக இருப்பதாக உணர்கிறேன்.

ஆனாலும், மும்பை அணிக்காக விளையாடும்போது எனது முழுத்திறனையும் கொடுத்து முழுபலத்துடன் 100 சதவீதம் உணர்ந்து விளையாடுகிறேன். இன்றைய போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சி. மேலும், மும்பைக்காக ஆடும் ஒவ்வொரு பொடியையும் யாசித்து விளையாடுகிறேன் என்று மலிங்கா கூறினார்.

Advertisement