டி20 போட்டிகளில் ஓய்வு அறிவிப்பினை வெளியிட்ட மலிங்கா – அதிகாரபூர்வ அறிவிப்பு

Malinga-1
- Advertisement -

இலங்கை அணியின் தற்போதைய கேப்டனான லசித் மலிங்கா டி20 போட்டிகளில் தான் ஓய்வு பெரும் தேதியை அறிவித்தார். இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா 2004ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட துவங்கினார். அன்று முதல் இன்றுவரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அவர் இலங்கை அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

Malinga

- Advertisement -

இதுவரை இலங்கை அணிக்காக 72 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள மலிங்கா 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் இவர் ஐபில் மற்றும் இதுபோன்று பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் பங்கேற்று தனது திறமையான பவுலிங்கை மூலம் பெரும் புகழினை சம்பாதித்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் டி20 போட்டிகளில் இருந்த தனது ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதனபடி அடுத்த வருடம் 2020 அம்மா ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளோடு டி20 போட்டிகளுக்கு குட்பை சொல்ல உள்ளதாக முறைப்படி அறிவித்துள்ளார்.

malinga

தற்போது இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபில் தொடரில் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 35 வயதான மலிங்கா இன்னும் சில மாதங்களில் துவங்க இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியை கேப்டனாக வழிநடத்த போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement