ஜூலை 26 ஆம் தேதி ஓய்வு பெற்றபின் இலங்கையை விட்டு வெளியேறி வேறுநாட்டில் செட்டில் ஆகவுள்ள – மலிங்கா

Malinga-1
- Advertisement -

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா உலகக் கோப்பை தொடருக்கு பின்பு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரில் இலங்கை அணி லீக் சுற்றோடு வெளியேறியது.

Malinga

- Advertisement -

இதனையடுத்து அவர் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு படி தற்போது பங்களாதேஷ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட வந்துள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி வரும் 26ம் தேதி நடக்கிறது. இதில் பங்கு பெற்றபின் அந்த போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்ற தகவலை தற்போது இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே கொழும்பில் நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது : பங்களாதேஷ் அணியுடன் நடக்கும் முதல் போட்டியோடு நான் ஓய்வுபெறப் போகிறேன் என்று மலிங்கா என்னிடம் வந்து சொன்னார். ஆனால் அணி நிர்வாகத்திடம் எப்போது சொல்லப்போகிறார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் ஓய்வு இருப்பது உறுதி என்று கூறினார் கருணரத்னே.

malinga

36 வயதாகும் மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்டான இவர் “யார்க்கர் மன்னன்” என்றும் ரசிகர்களிடையே செல்லமாக அழைக்கப்படுகிறார். ஓய்வுக்குப் பிறகு இலங்கையை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆக இருப்பதாக அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனால் இலங்கை அணியின் ரசிகர்கள் சற்று வருத்தத்துடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement