3 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய தெ.ஆ சுழற்பந்துவீச்சாளர் மகாராஜ் – காரணம் இதுதான்

Maharaj
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

IND vs RSA

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் கடைசி போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான மகாராஜ் விலகியுள்ளார். மேலும் அதற்கான காரணத்தையும் அணி நிர்வாகம் கூறியுள்ளது.

அதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது முதல் இன்னிங்ஸில் பந்துவீசிய மகாராஜ் பந்தை பீல்டிங் செய்யும்போது வலது தோள்பட்டையில் பலமாக அடிபட்டு கொண்டார். எனவே இதன் காரணமாக அதன் பிறகு எடுக்கப்பட்ட ஸ்கேனில் தோள்பட்டை தசைப் பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அவருக்கு இரண்டு வாரங்கள் முதல் மூன்று வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Maharaj 2

இதனால் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியிலிருந்து அவர் விலகி உள்ளதை தென்னாபிரிக்க அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement