இந்தியாவில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் பதிமூன்றாவது ஐபிஎல் சீசன் அடுத்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் மற்றும் வீரர்கள் மாற்றம் ஆகியவை தற்போது வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களது அணியிலிருந்து வீரர்களை விடுவிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. எனவே அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து நீக்கப்பட இருக்கும் வீரர்களின் பட்டியலை அறிவிக்கவேண்டும்.
அதன்படி தற்போது சென்னை அணி நீக்கப்படும் 5 வீரர்கள் கொண்ட பட்டியலை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. சைதன்யா பிஷ்நோய், சாம் பில்லிங்ஸ், துரு சோரே, டேவிட் வில்லி மற்றும் மோகித் சர்மா ஆகிய 5 வீரர்களை சென்னை அணி விடுவித்தது. இந்நிலையில் சென்னை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நெகிடி மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Super thanks to Scott Kuggeleijn who pounced in as the injury-replacement last year. Singham @NgidiLungi will be back in the Summer of ’20! #WhistlePodu #Yellove ???????? pic.twitter.com/cJ72b5X4h2
— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2019
சென்ற ஆண்டு சென்னை அணியில் இடம்பெற்றிருந்த லுங்கி நெகிடி காயம் காரணமாக அந்த தொடரின் துவக்கத்திலேயே அணியில் இருந்து விலகினார். தற்போது காயத்திலிருந்து மீண்ட தென்னாபிரிக்க அணிக்காக விளையாடி வருகிறார் அதனைத்தொடர்ந்து வரும் ஐ.பி.எல் தொடரில் மீண்டும் சென்னை அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.