SRH : வார்னர் இந்த தொடரில் பங்கேற்கும் முன் இந்த சத்தியத்தை கொடுத்துவிட்டே ஆட துவங்கினார் – லக்ஷ்மன் பேட்டி

இந்தியாவில் தற்போது 12 ஆவது ஐ.பி.எல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஓராண்டு தடைக்கு பின் டேவிட் வார்னர் சன் ரைசர்ஸ் அணியில் இணைந்து விளையாடி வருகிறார். இந்த

VVS
- Advertisement -

இந்தியாவில் தற்போது 12 ஆவது ஐ.பி.எல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஓராண்டு தடைக்கு பின் டேவிட் வார்னர் சன் ரைசர்ஸ் அணியில் இணைந்து விளையாடி வருகிறார். இந்த தொடரில் அவரது ஆட்டம் சிறப்பாக உள்ளது.

warnerfier

- Advertisement -

இதுவரை இந்தத்தொடரில் 12 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ள வார்னர் 1 சதத்துடன் 692 ரன்களை குவித்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் ஐ.பி.எல் தொடரின் இவரது சிறப்பான ஆட்டத்தை கண்ட ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் மீண்டும் அவரை உலகக்கோப்பை அணியில் சேர்த்தது எனவே அவர் பயிற்சிக்காக நாடு திரும்பினார்.

இந்நிலையில் சன் ரைசர்ஸ் அணியின் மென்டர் வார்னர் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த தொடரில் வார்னர் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு வரும்போது அணியின் பயிற்சியாளர் டாம் மோடியிடம் இந்த தொடரில் 500 ரன்களை நிச்சயம் குவிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு இந்தியா வந்து அணியில் இணைந்தார். அதன்பின் இந்த தொடரில் அவர் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி விட்டார்.

அதேபோல் இந்த ஆண்டு சிறப்பான துவக்கத்தினை பேர்ஸ்டோவுடன் இணைந்து கொடுத்தார். அவர் கூறியது போலவே 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தார். அவரது சத்தியத்தை அவர் நிறைவேற்றி விட்டார். தற்போது துவக்க வீரர்கள் இருவர் இன்றி சன் ரைசர்ஸ் அணி பிளேஆப் சுற்றுகளில் விளையாட இருக்கிறது. அவர்கள் இருவரும் இல்லாதது எங்கள் அணிக்கு பெரிய இழப்பு என்று லட்சுமண் கூறினார். வார்னர் இதுவரை 5 சீசனில் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement