டி20 கிரிக்கெட்டிலிருந்து எப்போது ஓய்வு ? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லாசித் மலிங்கா – விவரம் இதோ

Malinga
- Advertisement -

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா கடந்த 2004ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமாகி 30 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கிட்டத்தட்ட சர்வதேச கிரிக்கெட்டில் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

Malinga

- Advertisement -

ஆனாலும் இன்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் மலிங்கா அச்சுறுத்தக் கூடிய ஒரு பவுலராகவே சர்வதேச கிரிக்கெட்டில் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் 37 வயதாகும் லசித் மலிங்கா கடந்த மார்ச் மாதம் முதல் எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட்டிலும் இலங்கை அணிக்காக விளையாடவில்லை.

அதனால் அவரது ஓய்வு குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் மலிங்கா தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னால் இப்போதும் டி20 கிரிக்கெட்டில் 24 பந்துகளை எளிதாக வீச முடியும் சொல்லப்போனால் நான் 200க்கும் மேற்பட்ட பந்துகளை கூட வீசுவேன்.

இருந்தாலும் முன்பினை போல என்னுடைய உடற் தகுதியை தற்போது என்னால் நிரூபிக்க முடியவில்லை. ஏனெனில் நான் வீட்டில் இருப்பதால் அதை என்னால் செய்ய முடியவில்லை இருந்தாலும் என்னால் சர்வதேச போட்டிகளில் தற்போதும் விளையாட முடியும். ஏற்கனவே இருமுறை நான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி உள்ளதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.

malinga

மேலும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகமும் என்மீது நம்பிக்கை வைத்து என்னை விளையாட வைக்க வேண்டும் என மலிங்கா தெரிவித்துள்ளார். ஏற்கனவே தற்போது மோசமான நிலையில் இருக்கும் இலங்கை அணியை காப்பாற்ற மலிங்கா போன்ற வீரர்கள் அணியில் இருப்பது அவசியம் என ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement