இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை பார்க்கும்போது எனக்கு இதுவே நியாபகம் வருகிறது – லாரா பேட்டி

Lara
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சி மைதானத்தில் துவங்கவுள்ளது. ஏற்கனவே இந்தியனை இந்த தொடரை கைப்பற்றியுள்ளதால் இந்த போட்டியின் முடிவு இந்திய அணியை எந்த விதத்திலும் பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Ind

- Advertisement -

நம்பர் 1 அணியான இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் என பிரைன் லாரா இந்திய அணி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தற்போது உள்ள இந்திய டெஸ்ட் அணி உலகின் சிறந்த அணி என்று நான் கூறுவேன்.

விராட் கோலி அணியை வழிநடத்தும் விதம் மிக அற்புதமாக உள்ளது. மேலும் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மிரட்டுகிறது. குறிப்பாக ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா என வேகப்பந்து வீச்சில் இந்திய வீரர்கள் மிரட்டுகிறார்கள்.

Shami

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை பார்க்கும் போது பழைய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர்கள் எவ்வாறு பிரகாசித்தார்களோ அவர்களைப் போல தற்போது இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் பிரகாசித்து வருகின்றனர். இப்போது உள்ள இந்திய அணியின் வேகப்பந்து யூனிட்டே மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சு யூனிட் என்று லாரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement