இந்திய வீரர்களுக்கு தனது வீட்டில் பார்ட்டி வைத்த லாரா. கோலி மட்டும் கலந்து கொள்ளவில்லை – காரணம் இதுதான்

Ind
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் வரும் 22ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது.

Lara

- Advertisement -

இதற்கு முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் இந்தியா பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா இந்திய வீரர்கள் சிலருக்கு தனது வீட்டில் பார்ட்டி வைத்துள்ளார்.

இதில் இந்திய வீரர்கள் தவான், ரோகித் சர்மா, புஜாரா, மாயங்க் அகர்வால், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் கெயில், சுனில் நரேன், பொல்லார்ட், பிராவோ ஆகியோரும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். பிராவோ அப்போது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Rohith

இந்த பார்ட்டியில் கேப்டன் கோலி கலந்து கொள்ளவில்லை. இந்த விடயம் தற்போது சர்ச்சையாகி வருகிறது. ஏனெனில் கெயிலும் விராட் கோலியும் நல்ல நட்பில் இருப்பவர்கள் இருந்தும் அந்த பார்ட்டியில் கோலி ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ரோஹித் கலந்துகொண்டதால் கோலி போகவில்லையா ? என்ற கேள்வியும் எழுந்தது.

Kapil-Dev

ஆனால் கோலி வராததற்கு சில காரணம் யாதெனில் பயிற்சியாளர் தேர்வு அதன் பிறகு தற்போது நடக்கும் டெஸ்ட் தொடர் என இந்த விடயங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டியிருப்பதால் கோலி வர முடியாமல் போயிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement