இந்திய அணிக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் விடுத்த விமர்சையான அழைப்பு – வைரலாகும் புகைப்படம்

Pak-fans-1
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி பெரும்பாலும் ஐசிசி தொடர்களில் மட்டுமே கடந்த பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2007-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறுவதில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

Pak fans

- Advertisement -

அதன்பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்ரிலேயே சந்தித்துக் கொண்டது. தற்போது பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது .இந்த தொடரில் ஒரு போட்டியில் இஸ்லாமாபாத் மற்றும் முல்தான் அணிகள் மோதின . அப்போது மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் இந்தியா இங்கு வரவேண்டும். எங்களுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும் எழுதிய பதாகைகளை ஏந்திக் கொண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இவ்விரு அணிகளும் ஆசிய கோப்பை, உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை போன்ற போட்டிகளில் மட்டுமே எதிரெதிராக சந்தித்து வருகிறது . கடைசியாக இந்திய அணி 2006 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் பாகிஸ்தானில் சென்ற விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement