மீண்டும் அம்பயர்கள் செய்த மிகப்பெரிய தவறு. பலியாடான அஸ்வின் – காரணம் இதுதான்

Umpire
- Advertisement -

இந்த வருட ஐ.பி.எல் தொடரின் 9 ஆவது போட்டி மொஹாலி மைதானத்தில் பஞ்சாப் அணிக்கும், மும்பை அணிக்கும் எதிராக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது.

Kxip

- Advertisement -

அதன்படி மும்பை அணியின் துவக்க வீரர்கள் களமிறங்கினர். முதல் ஓவரை வீச பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் வந்தார். இவரை முதல் ஓவரில் 6 பந்துகளுக்கு வெறும் 3 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். ஆனால், அஸ்வின் கவனமின்றி 7 ஆவது பந்தினையும் வீசினார். அம்பயரும் அதனை கவனிக்கவில்லை.

அந்த 7 ஆவது பந்தினை பவுண்டரி அடித்தார் டிகாக். இந்த பந்து ஆட்டத்தில் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இரண்டு அம்பயர்களும் இந்த பந்தினை வேடிக்கை பார்த்தனரே தவிர தடுக்கவில்லை. ஏற்கனவே இதேபோன்ற மும்பை அணி வீரரான மலிங்கா நோபால் வீசியதை கவனிக்காத அம்பயர்கள் விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

Ashwin

அம்பயர்களின் தொடர்ச்சியான இந்த கவனக்குறைவால் ஆட்டத்தின் முடிவில் மாற்றம் நிகழ்கிறது. குறிப்பாக இந்த போட்டியிலும் 7 பந்தில் ரன் எடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அந்த பந்தில் 4 ரங்களை டிகாக் அடித்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற செயலால் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

Advertisement