துபாயில் பயிற்சியில் இருந்தாலும் என் மகளை பார்க்காமல் தவிக்கிறேன் – இந்திய வீரர் வெளியிட்ட உருக்கமான செய்தி

Shami
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ipl

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் விளையாடுவதற்காக அனைத்து அணிகளும் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து தீவிர பயிற்சி மேற்கொண்டு ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் இந்த தொடரில் ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடைபெற இருப்பதால் இந்த தொடர் எவ்வளவு சுவாரசியமாக அமைய உள்ளது என்பது அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் துபாய் சென்று அடைந்த அனைத்து அணிகளும் தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், கிங்ஸ் லெவன் அணியின் வீரருமான முஹமது ஷமி தனது மகளை மிகவும் மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Shami 1

ஊரடங்கு காலத்திலும் நான் எனது பண்ணையில் வீட்டியிலேயே பயிற்சியை மேற்கொண்டு இருந்ததால் அவளை பார்க்க முடியவில்லை. அவளும் கிடுகிடுவென வளர்ந்து விட்டால் என் மகளை பார்க்காமல் நான் மிகவும் வருத்தத்தில் உள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்றினால் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப முடியாமல் இருந்த நாங்கள் தற்போது ஐபிஎல் வாய்ப்பு மூலம் மீண்டும் கிரிக்கெட் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

Shami

பயிற்சியில் எந்தவித பின்னடைவும் இல்லை. மைதானத்திற்கு நேரில் வந்து எங்களுக்கு உற்சாகம் அளிக்கும் ரசிகர்கள் இல்லாதது இந்த தொடரில் ஏற்படுகின்ற இழப்பு தான். இருப்பினும் இந்த தொடரில் எங்களது ஆட்டத்தின் மூலம் அவர்களுக்கு உற்சாகம் கொடுப்போம் என்று கூறியுள்ளார். ஷமி மற்றும் அவரது மனைவி ஹசின் ஜகான் ஏற்கனவே அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது. அவரது மகள் ஆயிரா தனது அம்மாவுடன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement