INDIA : இவரது விக்கெட் தான் நான் எடுத்ததிலே சிறப்பான விக்கெட் – குல்தீப் யாதவ்

உலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி நேற்று முன்தினம் மான்செஸ்டர் நகரில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமை

Kuldeep
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி நேற்று முன்தினம் மான்செஸ்டர் நகரில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

ind vs aus

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் 140 ரன்களும், கோலி 77 ரன்களையும் குவித்தனர்.

அதன் பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழைய குறுக்கிட்டதால் போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ஓவர்களில் 136 ரன்கள் அதாவது 40 ஓவர்களில் 302 ரன்கள் அடிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை மட்டுமே அடித்தது. இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்று அளித்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் கூறியதாவது : பாகிஸ்தான் அணிக்கு எதிராக நான் சிறப்பாக பந்து வீசினேன். அதற்கு முந்தைய ஆட்டத்தில் எனது பந்துவீச்சை சுமாராகவே அமைந்தது. அதனால் பாகிஸ்தான் போட்டியில் சிறப்பாக பந்துவீச காத்திருந்தேன். நான் இதுவரை வீசியதிலேயே சிறப்பான பந்துவீச்சாக பாபர் அஸம் போல்டாக்கி விக்கெட் எடுத்தது சிறப்பானதாக நினைக்கிறேன். அந்த பந்து எனது கனவு பந்தாகும் என்றும் குல்தீப் கூறினார்.

Advertisement