இவர்கள் இருவரும் மும்பை அணிக்கு தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று தருவார்கள் – குருனால் பாண்டியா நம்பிக்கை

Krunal
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல் தொடரின் 7 ஆவது போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், பெங்களூரு அணிக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக ரோஹித் சர்மா 48 ரன்களை குவித்தார். ஹார்டிக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்களை குவித்தார்.

Kohli

- Advertisement -

பிறகு ஆடிய பெங்களூரு அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. அதன்படி தெடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 181 ரன்களை குவித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டிவில்லியர்ஸ் 41 பந்தில் 70 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி சார்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டிக்கு பிறகு பேசிய க்ருனால் பாண்டியா கூறியதாவது : இன்றைய போட்டியில் பும்ரா சிறப்பாக பந்துவீசினார். கடந்த ஒரு வருடமாக இந்திய அணிக்கும் சரி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரி தொடர்ச்சியான சிறப்பான பங்களிப்பை பும்ரா அளித்துவருகிறார். மேலும், ஹார்டிக் பந்தை பலமாக அடிக்க கூடியவர் அதனை நான் பலமுறை பார்த்துள்ளேன். அதனையே இன்று ஹார்டிக் பாண்டியா நிகழ்த்தி காட்டினார்.

hardik 2

ஹார்டிக் பாண்டியாவும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தினை மும்பை அணிக்கு அளிப்பார். மேலும் இவர்கள் இருவருமே மும்பை அணியின் தொடர் வெற்றிக்கு நம்பலாம். மேலும் இரண்டாவது போட்டியில் வென்று தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது மகிழ்ச்சியை தருகிறது என்று க்ருனால் பாண்டியா பேசினார்.

Advertisement