அஸ்வின் போன்று இல்லாமல் நியாமாக நடந்து கொண்ட க்ருனால் பாண்டியா – வீடியோ

Krunal
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 9 ஆவது போட்டி இன்று 4 மணிக்கு மொஹாலி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கும், மும்பை அணிக்கும் எதிராக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்களை குவித்தது.#

Kxip

- Advertisement -

பிறகு 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற்றது. பஞ்சாப் சார்பில் ராகுல் ஆட்டமிழக்காமல் 71 ரன்களை குவித்தார். இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இரண்டாவதாக ஆடிய பஞ்சாப் அணி ஆடி கொண்டிருந்தபோது மும்பை அணி வீரரான க்ருனால் பாண்டியா பந்து வீசினார். அப்போது கிரீஸில் இருந்து மாயங்க் அகர்வால் வெளியே நகர்ந்து சென்றார். இதனை கண்ட பாண்டியா அஸ்வின் போன்று அவரை அவுட் ஆக்காமல் அவரை பார்த்தபடி சென்றார். இதோ அந்த வீடியோ :

இவரின் இந்த செயல் ரசிகர்களால் பெரிதளவு பாராட்டப்பட்டு வருகின்றது. அடுத்த போட்டி டெல்லி அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.

Advertisement