Virat Kohli : கோலி நாளைய போட்டியில் விளையாடுவது குறித்து – நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் விளையாடி விட்ட நிலையில் இந்தியா நாளை தனது முதல் ஆட்டத்தில்

Kohli
- Advertisement -

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் விளையாடி விட்ட நிலையில் இந்தியா நாளை தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாட உள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி கடந்த இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியில் வென்று வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சி செய்யும்.

kohli 1

- Advertisement -

அதே போன்று தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தன்னம்பிக்கையுடன் தொடரை ஆரம்பிக்க இந்திய அணி முயற்சி செய்யும். சவுதாம்ப்டனில் நாளை நடைபெற உள்ள இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும் டு பிளிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணிக்கு தற்போது மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது யாதெனில் நேற்று முன்தினம் நடந்த பயிற்சியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பயிற்சியின்போது வலதுகையின் பெருவிரலில் காயமடைந்தார். உடனே முதலுதவி சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது. இருப்பினும் வலியும் வீக்கமும் குறையாமல் இருந்ததால் கோலி பயிற்சியிலிருந்து பாதியில் வெளியேறினார்.

kohli pad

இந்நிலையில் நேற்று காலை மற்றும் மாலையில் விராட் கோலி பயிற்சியில் பங்கேற்கவில்லை ஏனெனில் அவரது வீக்கம் சற்று குறையாமலும், வலி இருந்த காரணத்தினாலும் அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. ஆனால் நேற்று இரவு அவருக்கு வீக்கம் குறைந்து வலியும் விளங்கியதாகத் தெரிகிறது. அதனால் இன்று காலையிலிருந்து விராட் கோலி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்றும் பயிற்சி சிறிது நேரம் ஈடுபட்ட பிறகு அவருக்கு உடல்தகுதி சோதனை நடத்தப்பட்டது.

Kohli

அந்த சோதனையில் அவர் நாளைய போட்டியில் விளையாடுவதற்கு முழு உடல் தகுதியுடன் உள்ளார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியா நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டதால் நாளை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement