கோலியிடம் திட்டு வாங்கிய குல்தீப் யாதவ். காரணம் இதுதான் – இதை கவனிச்சீங்களா ?

kuldeep
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டியான இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

Pollard

- Advertisement -

அதன்படி தற்போது முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் 5 முடிவில் விக்கெட் இழப்பிற்கு 315 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பூரான் 89 ரன்கள் அடித்தார். 5 ஆவது விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடிய பொல்லார்ட் மற்றும் பூரான் ஜோடி 135 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய பூரான் 64 பந்துகளில் 89 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 74 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது 74 ரன்களில் 3 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி 10 ஓவர்களில் 110 ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணியை திணறடித்தது.

Pollard 1

இந்தப் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ்வை கோலி கடுமையாக திட்டிய சம்பவம் நடந்தது. அப்படி போட்டியின் முக்கியமான சூழ்நிலையில் பொல்லார்ட் மற்றும் பூரான் அதிரடியாக விளையாடி கொண்டிருக்கும்போது அந்த நேரத்தில் சிக்சர் அடிக்க ஏதுவான பந்துகளை அதுவும் மெதுவாக தூக்கி வீசிய குல்தீப் யாதவை பார்த்து கோலி இவ்வாறு கடினமாக நடந்து கொண்டார்.

Pooran

ஏனெனில் முதல் பந்தை லென்த்தாக குல்தீப் வீச பொல்லார்ட் ஒரு சிக்சர் அடிக்க மீண்டும் அதே போன்று மூன்றாவது பந்தையும் லென்த்தாக வீச பூரான் சிக்ஸ் அடித்தார். அதனை பார்த்த கோலிக்கு கோபம் வந்தது. அதனால் கோலியிடம் குலதீப் திட்டுவாங்கினார். இந்த போட்டியில் குல்தீப் 10 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 67 ரன்கள் கொடுத்தார். இவர் சென்ற போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது

Advertisement