Virat Kohli : பெங்களூரு அணி ரசிகர்களுக்காக விராட் கோலி பதிவிட்ட நெகிழ்ச்சி பதிவு – விவரம் இதோ

ஐ.பி.எல் கோப்பைக்கும், பெங்களூரு அணிக்கும் எப்போதும் ஆகாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பெங்களூரு அணி. ஏனென்றால் பலமான வீரர்கள் பலர் பெங்களூரு அணியில் இருந்த

Virat
- Advertisement -

ஐ.பி.எல் கோப்பைக்கும், பெங்களூரு அணிக்கும் எப்போதும் ஆகாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பெங்களூரு அணி. ஏனென்றால் பலமான வீரர்கள் பலர் பெங்களூரு அணியில் இருந்தபோதும் அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. இந்த வருடமும் கடைசி இடம் பிடித்து வெளியேறியது.

இந்நிலையில் பெங்களூரு அணியின் ரசிகர்களுக்காக அந்த அணியின் கேப்டன் விராட் கோலி உருக்கமான பதிவினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கோலி பதிவிட்டதாவது : எங்கள் மீது அன்பும், ஆதரவும் வைத்திருக்கும் பெங்களூரு அணியின் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் மற்றும் உதவியாளர்கள் என அனைவர்க்கும் நன்றி என்று நெகிழ்ச்சியான பதிவினை பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

பெங்களூரு அணி ரசிகர்களின் புகைப்படத்தை பதிவிட்டு அவர் போட்டிருக்கும் இந்த பதிவிற்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. மேலும், இந்த பதிவினை பலரும் லைக் செய்து வருகின்றனர். இதோ அந்த பதிவு :

இந்த வருடம் பாதியில் பெங்களூரு அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியது. இந்த வருடம் போன்று இல்லாமல் அடுத்த ஆண்டு மிகுந்த பலத்தோடு திரும்ப வருவேன் என்று கோலி கூறியுள்ளார்.

Advertisement