Virat Kohli : இவர்கள் இருவர் ஆடும்போது இந்திய அணிக்கு ஒரு வெற்றி வாய்ப்பு இருந்தது – கோலி பேட்டி

உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து

Kohli
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

Ind vs Eng

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 337 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக பேர்ஸ்டோ 111 ரன்களை குவித்தார். பென் ஸ்டோக்ஸ் 79 ரன்கள் குவித்தார்.

பிறகு 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 102 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியை இந்திய அணிக்கு இந்த தொடரின் முதல் தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Pandya

போட்டி முடிந்து பேசிய கோலி பண்ட் மற்றும் பாண்டியா குறித்து பேசியதாவது : பாண்டியா மற்றும் பண்ட் ஆகியோர் பேட்டிங் செய்யும்போது இந்திய அணிக்கு வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருந்தாக கருதுகிறேன். இருவரும் அதிரடியாக சிறப்பாக ஆடினார்கள். இருப்பினும் மைதானம் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணியின் ரன்குவிப்புக்கு ஒத்துழைக்காததால் அவர்களால் அந்த பார்ட்னர்ஷிப்பை வெற்றிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தால் இந்திய அணி தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்று கோலி கூறினார்.

Advertisement