இந்த மைதானத்தில் அவரால் என்ன முடியும் என்பதை காண்பித்துவிட்டார் – வெற்றிக்கு இவரே காரணம் கோலி மகிழ்ச்சி

Kohli
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 28 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

RCBvsKKR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிவிலியர்ஸ் 33 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் கோலி 33 ரன்களுடனும் களத்தில் இருந்தார். துவக்க வீரர்களான பின்ச் மற்றும் படிக்கல் ஆகியோர் முறையே 47 மற்றும் 32 ரன்களை குவித்தனர் .அதன்பின்னர் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை மட்டுமே அடித்தது.

கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக தொடக்க வீரர் கில் 34 ரன்கள் அடித்தார். அவரை தவிர மற்றவர்கள் யாரும் 20 ரன்களை கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க.து பெங்களூர் அணி சார்பாக வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசி நான்கு ஊர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், மோரிஸ் 4 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

abd

இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் கோலி கூறுகையில் : இந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரர்கள் சிறப்பாகவே விளையாடினார்கள். நாங்கள் சரியான தூக்கத்தை பெற்றோம் அதுமட்டுமின்றி வீரர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே அணிக்கு பங்களிப்பை வழங்கி வருகின்றனர். பந்துவீச்சில் மோரிஸ் அணிக்கு திரும்பி இருப்பது பலம் அளிக்கிறது. அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசுவதில் மகிழ்ச்சி.

- Advertisement -

சார்ஜா மைதானத்தில் டாஸ் வென்றதும் விக்கெட் ஸ்லோவாக இருப்பதை நான் உணர்ந்தேன் அதனால் முதலில் பேட்டிங் செய்யும் முடிவெடுத்தேன். 165 முதல் 170 ரன்கள் குவித்தால் இந்த மைதானத்தில் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் எனக்கு அதை விட ரன்கள் அதிகமாக கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த போட்டியில் திட்டங்களை நாங்கள் சரியாக வகுத்திருக்கும் அதுமட்டுமின்றி இந்த போட்டியில் அனைத்து திட்டங்களும் சரியாகவே செயல்பட்டன. ஒரு அணியில் பந்துவீச்சு பலமாக இருந்தால் தொடரின் இறுதிவரை செல்லலாம். அந்த வகையில் எங்கள் பந்துவீச்சு திருப்தி அளிக்கிறது.

abd 1

இந்த போட்டியில் பந்துகள் நான் அடிக்கும் விதத்தில் எனக்கு வரவில்லை. ஆனால் டிவில்லியர்ஸ் வந்ததும் மூன்றாவது பந்தில் அடிக்க ஆரம்பித்தார். இதுபோன்ற மைதானங்களில் ஏபி டிவில்லியர்ஸ் என்ன செய்வார் என்பதை இங்கு காண்பித்து விட்டார். அவருடைய இந்த சிறப்பான இன்னிங்சால் அணிக்கு 194 ரன்கள் கிடைத்தது என்றால் அதற்கு முழு காரணம் டிவில்லியர்ஸ் தான் அவருடைய பேட்டிங்கே வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது. இந்த வெற்றியை அப்படியே கொண்டு செல்ல விரும்புகிறோம் என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement