Virat Kohli : போட்டி எங்களிடமே இருந்தது. ஆனால், தோனி எங்களுக்கு பயத்தை காட்டி விட்டார் – கோலி பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி

Kohli-1
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

VK and MS

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 ரன்களும், மொயின் அலி 26 ரன்களையும் அடித்தனர். இதனால் சென்னை அணிக்கு 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தொடர்ந்து ஆடிய சென்னை அணி 20 முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை அடித்து 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ஷ்டவசமின்றி தோற்றது. தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கால் இருந்தார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 பந்துகளில் தோனி 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 24 ரன்களை சேர்த்தார். கடைசி பந்தை அடிக்க முடியாமல் விட மறுமுனையில் இருந்து பைஸ் ஓடிய தாக்கூர் ரன் அவுட் ஆனார். இதனால் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கோலி கூறியதாவது : இது ஒரு நல்ல சிறந்த போட்டி 19 ஆவது ஓவர் வரை போட்டி எங்கள் வசமே இருந்தது. இந்த மைதானத்தில் 160 ரன்கள் என்பது குறைந்த ரன்கள் தான். நாங்கள் 175 ரன்கள் வரை அடித்திருக்க வேண்டும். பார்த்திவ் மற்றும் டிவில்லியர்ஸ் ஆடும்போது 175 – 180 ரன்கள் வரை அடிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், எங்களால் 161 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

Raina

கடைசி பந்தில் நான் நினைத்தது நடந்தது. வெற்றி பெற்று விடுவோம் என்று நினைத்தேன் அதேபோன்று த்ரில்லிங் வெற்றி கிடைத்தது. ஆனால், தோனி கடைசி வரை நின்று எங்களுக்கு பயத்தை காட்டிவிட்டார். சைனி சிறப்பாக பந்துவீசினார். ஸ்டோனிஸ் மற்றும் ஸ்பின்னர்களை சென்னை அணி அடிக்க பார்த்தனர். ஆனால், இறுதியில் வெற்றி எங்களிடம் வந்தது. ஸ்டெயின் அற்புதமாக பந்துவீசினார் என்று கோலி கூறினார்.

Advertisement