IND vs AFG : முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இதற்காகத்தான். ஆனால் அது நடக்கவில்லை – கோலி பேட்டி

உலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும்

Kohli
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

ind vs afg

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக கோலி 67 ரன்களும், ஜாதவ் 52 ரன்களும் குவித்தனர்.

பின்னர் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இறுதி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப்பட்டது.

Kohli

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : இந்த போட்டியில் டாஸ் வென்ற அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்ற காரணத்தாலேயே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தேன். ஆனால் களம் இறங்கிய பிறகுதான் தெரிந்தது பிட்ச் ரொம்ப மெதுவாக இருந்தது. இதனால் ரன்கள் குவிப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது. மேலும் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். இதனால் 250 முதல் 260 ரன்கள் எடுத்தால் அதுவே வெற்றிக்கான ஸ்கோர் என்று நினைத்தேன்.

Shami

ஆனால் நாங்கள் நினைத்த திட்டத்தை இன்று பேட்டிங்கில் செயல்படுத்த முடியவில்லை. இதுபோன்ற மைதானங்களில் எவ்வாறு எந்த ஷாட்களை ஆட வேண்டும் என்று பேட்ஸ்மேன்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆப்கானிஸ்தான் ஆடிய ஆட்டத்தைப் பார்க்கும் போது என்ன நடக்குமோ என்று சந்தேகம் வந்து விட்டது. பிறகு நமது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வெற்றியை நம்மிடம் கொண்டு வந்தார்கள். ஷமி அபாரமாக பந்துவீசி தனது திறமையை வெளிப்படுத்தினார் என்று கூறினார்.

Advertisement