தன்னுடைய கடைசி போட்டியில் பேட்டிங் இறங்காமல் சூரியகுமார் யாதவை களமிறக்கியது ஏன் ? – கோலி விளக்கம்

Wiese
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நமீபியா அணியை எதிர்த்து விளையாடியது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கோலி கேப்டனாக செயல்படும் கடைசி போட்டி என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

indvsnam

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 132 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்கள். அதன்பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி ஆனது 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 136 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

துவக்கவீரர் ராகுல் 54 ரன்களுடனும், சூரியகுமார் யாதவ் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ரோகித்சர்மா 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி தங்களது முதல் விக்கெட்டை 10-ஆவது ஓவரின் கடைசி பந்தில் இழந்தது. முதல் விக்கெட்டாக ரோஹித் ஆட்டமிழந்து வெளியேறியதும் மூன்றாவது பேட்ஸ்மேனாக வழக்கம்போல் விராட் கோலி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

sky

அதுமட்டுமின்றி கேப்டனாக கோலிக்கு இது கடைசி போட்டி என்பதால் அவரது பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக 3 ஆவது இடத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 4 பவுண்டரி 25 ரன்கள் குவித்தார். இப்படி கடைசி போட்டியில் தனக்கு முன் சூரியகுமார் யாதவை களமிறக்கியது ஏன் என்றும் கேப்டன் கோலி போட்டி முடிந்து பதிலளித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : நமீபியா அணிக்கெதிரான கடைசி போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள் – காரணம் இதுதான்

இதுகுறித்து அவர் கூறுகையில் : சூர்யகுமார் யாதவ் இந்த உலக கோப்பை தொடரில் போதுமான அளவு பேட்டிங் செய்யவில்லை. அவருக்கு பேட்டிங் செய்ய நேரமும் கிடைக்கவில்லை. எனவே இந்த போட்டியில் தன்னுடைய இடத்தில் சூரியகுமார் யாதவை களமிறக்கியதாகவும் கேப்டன் விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement