RCB vs RR : பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சினை தேர்வு செய்தது

Kohli
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 14 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரின் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

rr

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி தற்போது பெங்களூரு அணி பேட்டிங்கை செய்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்வது குறித்து கோலி ஆட்டத்திற்கு முன் பேட்டி ஒன்றினை அளித்தார்.

அதில் கோலி கூறியதாவது : இந்த போட்டியில் டாஸ் நாங்கள் இழந்தாலும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். மேலும் தொடரின் மூன்று போட்டிகளை துவக்கத்தில் தோற்பது நல்லதல்ல. இந்த மைதானம் பிளாட் பிட்சாக இருப்பதால் முதலில் நல்ல பாட்னர்ஷிப் அமைத்து பெரிய இலக்கினை ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயிப்போம்.

Kohli

இந்த போட்டியில் இருந்து பெங்களூரு அணி வெற்றிப்பாதைக்கு திரும்பினால் அது இந்த நீண்ட தொடருக்கு உதவியாக இருக்கும், வீரர்களுக்கும் இந்த வெற்றி உத்வேகத்தை அளிக்கும் என்று கோலி கூறினார்.

Advertisement