தோனி நேற்றும் பொறுமையாக விளையாட ஒரு காரணம் இதுதான் – விராட் கோலி விளக்கம்

Kohli
- Advertisement -

ரிசர்வ் டே ஆன இநேற்று நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடர்ந்து ஆடியது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டைலர் 74 ரன்களை அடித்தார். இதனால் இந்திய அணிக்கு 240 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த இலக்கை துரத்திய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ராகுல், ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி ஆரம்பத்திலேயே அதலபாதாளத்திற்கு சென்றது. பின்னர் இறுதியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி 59 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று இறுதியில் அவுட்டானார்.

இன்னிங்ஸ் முடிந்து விட்டது என்று இந்திய ரசிகர்கள் பலரும் வருத்தம் அடைந்தனர். தோனி 50 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Dhoni

நேற்றைய போட்டியிலும் தோனி 72 பந்துகளுக்கு 50 ரன்கள் என்று பொறுமையாகவே ஆடினார். இதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : தோனி இந்த போட்டியிலும் சிறப்பாகவே ஆடினார். அவர் இறங்கிய இடத்தில வேறு யார் இறங்கி இருந்தாலும் இந்த கடினமான சூழ்நிலையை வெற்றிக்கு அருகில் கொண்டு வந்திருக்க முடியாது. மேலும் அவர் அடிக்க நினைத்து முன்பே அவுட் ஆகியிருந்தால் எல்லாம் அப்போதே முடிந்திருக்கும். எனவே தான் இறுதிவரை நின்று வெற்றி இலக்கை அடிக்கவே அவர் முயற்சி செய்தார் என்று கோலி விளக்கமளித்தார்.

Advertisement