எங்கள் அணியில் எனக்கு அடுத்த லீடர் இவர்தான். இவரே எங்களது அணியின் பலம் – விராட் கோலி ஓபன் டாக்

Kohli-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 39 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை மட்டுமே குவித்தது.

RCBvsKKR

- Advertisement -

துவக்க வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பின்னர் எந்த இடத்திலுமே கொல்கத்தா அணியால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதிகபட்சமாக மோர்கன் 30 ரன்களையும், லோகீ பெர்குசன் 19 ரன்களை குவித்தனர். பெங்களூரு அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா அணி சுருண்டது என்றே கூறலாம்.

அதன் பின்னர் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா பெங்களூரு அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 85 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் படிக்கல் 25 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் குர்கீரத் சிங் 21 ரன்களும், விராட் கோலி 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணியின் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

rcb

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய கோலி குறிப்பிடுகையில் : உலகில் உள்ள பல்வேறு சிறந்த வீரர்களை அணியில் கொண்டிருப்பது ஒரு நம்பிக்கையையும், போட்டிகளின் முடிவுகளையும் மாற்றியமைக்கும். அந்த வகையில் மோரிஸ் எங்களது அணியில் அதிக பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறார். கிட்டத்தட்ட அவர் ஒரு லீடர் போன்றே எங்கள் அணியில் இருக்கிறார்.

Morris

எப்பொழுதும் அணியின் வெற்றிக்காக உழைக்கும் அவர் பஞ்சாப் அணிக்கு எதிராக தோற்கும் நேரத்திலும் தனது முழு திறனையும் வெளிப்படுத்தி பந்துவீசினார். அது அவருடைய பரந்த மனதை காட்டுகிறது. எந்த ஒரு இடத்திலும் அவரது நம்பிக்கையை அவர் இழந்ததில்லை அவருடைய எனர்ஜி அபரிமிதமானது. அவரின் சேர்க்கை எங்கள் அணிக்கு மிகப்பெரிய பலம் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement